உலகுக்கே சோதனைகளைத் தந்து விடைபெறும் 2020
கொரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு இன்னல்களைத் தந்த இவ்வருடம் மெல்ல நகர்ந்து, இன்றுடன் நிறைவடையப்போகிறது. புத்தாண்டு என்றாலே, ஒவ்வோர் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி இரவு, உலகமே கொண்டாட்டக் கடலில் முழ்கித் திளைக்கத் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டோ கொரோனாவைத் தடுக்க கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்திருக்கும் தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அதன்படி, நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்குள் மூடப்படும் என்றும், மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படும்…