வீடுகளுக்குள் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி: தமுஎகச குற்றச்சாட்டு
பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச), வீடுகளுக்குள் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொறுப்புத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத…