முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: போரிலிருந்து பின்வாங்கிய பல்கேரியாவும், அது ஏற்படுத்திய தாக்கமும்!
பல்கேரியா, செர்பியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மைய சக்திகளின் படைகளின் உதவியோடு செர்பியாவின் கணிசமான நிலப்பரப்புகளை அது தன் வசம் கொண்டு வந்தது. கூடவே மாசிடோனியாவிலும் கால் பதித்தது. இதன் காரணமாக அக்கம் பக்கத்து நாடுகள் மிகவும் பதற்றமடைந்தன. தனிப்பட்ட முறையில் பல்கேரியாவுக்கு (செர்பியா மற்றும் கிரீஸ் நாடுகளிலிருந்து) நிலப்பரப்புகள் கிடைத்தன. ஆனால் போகப் போக முதலாம் உலகப்போரில் மைய சக்திகளின் நிலை ஆட்டம் காணத் தொடங்கியது. ஐ.நா.சபை நுழைந்ததும் மேற்கு முனையில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஹங்கேரி…