`ஷப்பா… முடியல’… முதல்வர் ஸ்டாலினின் தூக்கம் கெடுத்த அந்த பெரும்புள்ளிகள் யார் யார்?!
ஆளும் கட்சியான திமுகவின் 15-வது பொதுக்குழு சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது. இதில், திமுக தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ – மூத்தவர்களோ – அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான்…