செங்கோட்டை சம்பவம்: ‘ஏறத்தாழ 100 விவசாயிகளை காணவில்லை!’ என தன்னார்வ அமைப்பு தகவல்
குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் தன்னார்வ அமைப்பு ஒன்று கூறியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 12 முறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனையடுத்து, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று…