பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஜ்சார்ஜ் ஆகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே சமீபத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரின் 4 ஆண்டுகால சிறைத்தண்டனை காலம் நிறைவடைந்ததால், கடந்த 27-ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டாலும், அவர் பெங்களூரு மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நலம் தேறி வந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஜ்சார்ஜ் ஆகிறார். தொடர்ந்து பிப்ரவரி 3 அல்லது பிப்ரவரி 5-ஆம் தேதியில் அவர் தமிழகம் திரும்புவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.