Tamil News Today: தொடரும் கனமழை… தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி!
தொடர் கனமழை…தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி! தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று தொடங்கிய கனமழையானது நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து தற்போதும் பெய்து வருகிறது. தென் கடலோர மாவட்டங்களிலும் கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பல்வேறு முக்கிய சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றது. சென்னையில் தற்போது வரை இரண்டு சுரங்கப்பாதைகள்…