தமிழகத்துக்கு ஐந்து நாள்களுக்கு `ஆரஞ்ச் அலர்ட்!’
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இன்று தொடங்கி, அடுத்த சில நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. புதுச்சேரியில் விடிய விடிய மழை பெய்துவருகிறது.
புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உட்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதற்கிடையே, கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம், 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு கனமழைக்கான `ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.