‘வீட்டிலேயே இருங்கள்; வாடகையை நாங்கள் தருகிறோம்!’ – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக விலகல் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பதால் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் வேலையிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் டெல்லியில் ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக 50 சதவிகித பொருள்களும் வழங்கப்படும். முதியோர்,…