உடலில் காயங்களோடு இறந்து கிடந்த ஆண் புலி… உடுமலை வனப்பகுதியில் என்ன நடந்தது?
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட பல வகை விலங்குகளும், அரிய வகை தாவரங்களும் உள்ளன. வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமராவதி வனச்சரகத்தின் அமராவதி பிரிவு, கல்லாபுரம் கழுதைக் கட்டி ஓடைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு ஆண் புலி இறந்த நிலையில் கிடந்தது….