கோத்தகிரி: வளர்ப்பு நாயைக் கவ்விய சிறுத்தை; உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய உரிமையாளர்!
நீலகிரியில் காட்டை இழந்து தவிக்கும் காட்டுயிர்கள் தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சம் புகுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானை, கரடி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகளால் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இரவு நேரங்களில் குடியிருப்பில் உணவு தேடும் வனவிலங்குகளின் வீடியோ மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன….