களத்திலிறங்கிய சின்னத்தம்பி; வனத்துறையின் பலமணி நேர போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்டது மக்னா யானை!
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்குச் செல்லாமல் விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும், மீண்டும் ஊருக்குள் வந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி அந்த மக்னா யானை, கும்கி யானையின் உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, 6-ம் தேதி கோவை பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் வனச்சரகத்துக்குட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது….