`மத மோதலை ஏற்படுத்தும் பேச்சு?’ – அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!
2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை பேட்டியளித்தார். அந்த பேட்டியில், இந்து மத கலாசாரத்தை அழிக்கும் நோக்குடனும், கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடனும் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அண்ணாமலை இது தொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் ,மானுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல்…