மறைந்தார் ஃபாத்திமா பீவி: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, ஆளுநர்… தடம் பதித்த சாதனை பெண்!
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஃபாத்திமா பீவி, தன்னுடைய 96 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மட்டுமல்லாது, ஆசியாவிலேயே உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியும் ஆவார். மேலும், உயர் நீதிமன்ற அளவிலும் முதன்முதலாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் நீதிபதியும் இவரே. நீதித்துறை மட்டுமல்லாமல், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர், ஆளுநர் என பல்வேறு பதவிகளில் பொறுப்பு…