கர்நாடகா டூ தமிழ்நாடு: ஓசூர் வனப் பகுதியில் தஞ்சமடைந்த காட்டு யானைகள் கூட்டம்!
கர்நாடகாவில் இருந்து ஓசூர் வனக் கோட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஆண்டு தோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மாநில எல்லையான ஜவலகிரி வனப்பகுதி வழியாக தமிழகத்தில் நுழைவது வழக்கம். இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு,…