நீட், கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம்… மிரளாத மிருதுளா! |போராட்டக்களத்தில் பெண்கள் -1
அன்றைய தினம் சென்னைப் பல்கலைக்கழக வளாகம், எல்லா நாள்களையும் போல் இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மாணவர்கள் அவசர அவசரமாக வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஆசிரியர்களும் வகுப்புக்குத் தேவையான குறிப்பேடுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், சில மாணவர்கள் மட்டும், கூட்டமாக மடிக்கணினிகளில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். படம் பார்க்கும் மாணவர்களை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். பத்திரிகையாளர்கள் படம் பிடிக்கும் அளவுக்கு, அந்த மாணவர்கள் என்ன செய்தார்கள்? சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசி வெளியிட்ட குஜராத் வன்முறை குறித்த ஆவணப்படத்தை பார்த்துக்கொண்டிருந்ததே இந்த…