திருவள்ளூர்: `போலீஸ்கிட்ட போனால் போட்டுத் தள்ளிடுவோம்’ – பேக்கரியில் மிரட்டிப் பணம் பறித்த ரௌடிகள்!
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள ஸ்வீட்ஸ் பேக்கரி கடையொன்றில், பட்டாக் கத்தியைக் காட்டி ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிச்செல்லும் ரௌடிகளின் மிரட்டல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, பதைபதைக்க வைத்திருக்கின்றன. கடந்த ஏழாம் தேதி இரவு 9:30 மணியளவில், இந்த அட்டூழியம் நடந்தேறியிருக்கிறது. சி.சி.டி.வி காட்சியைப் பார்க்கும்போது, ரௌடி கும்பலைச் சேர்ந்த இருவர் முதலில் கடைக்கு வருகிறார்கள். கடை உரிமையாளரின் மனைவியும், வேலையாள் ஒருவர் மட்டுமே அந்நேரத்தில் கடையில் இருந்திருக்கிறார்கள். ரௌடிகள் பெண்ணை கூப்பிட்டு, ‘அக்கா ஆயிரம் ரூபாய்…