தடகள பயிற்சிக்குச் செல்லும் வழியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தில், தடகள வீராங்கனையான 15 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாகப் போதை மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, மம்தாட் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சிறுமிக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை – பஞ்சாப் சம்பவம் நடந்த அன்று, பாதிக்கப்பட்ட சிறுமி தடகள பயிற்சிக்காக, அதிகாலை ஆறு மணியளவில்…