சிவகாசி: 4,000 ரூபாயால் ஏற்பட்ட முன்பகை; வாலிபர் வெட்டிக்கொலை – 5 பேர் கைது
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரின் மகன் முத்துக்குமார். அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது மகனைக் காணவில்லை, அவனை யாராவது கடத்திச் சென்றிருப்பார்கள் என சந்தேகப்படுவதாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வைரமுத்து புகார் அளித்தார். முத்துக்குமார் இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் சிவகாசி அருகே…