திண்டுக்கல் – நிலக்கோட்டையில் 1 கிலோ மீட்டர் கால்வாய் மாயம்… பல ஏக்கர் விவசாயம் பாதிப்பு!
திண்டுக்கல் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ராமராஜபுரத்தைச் சுற்றி மட்டபாறை, விளாம்பட்டி, தாதன்குளம், முத்துலிங்கபுரம், தங்கையாபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 350 ஏக்கர் பரப்பில் நெல், தென்னை, வாழை, வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் வைகை ஆற்று பாசனத்தை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். கால்வாய் இதில் கள்ளந்திரி வாய்க்காலில் இருந்து பெரியமடை எனப்படும் ஊமச்சி மடையில் இருந்து வரும் கால்வாயில் தான் ராமராஜபுரம், தங்கையாபுரம் சுற்றுப்பகுதிகளில் சுமார் 116 ஏக்கர் விளைநிலங்களுக்கு…
கிசான் திட்டம்: 67% சரிந்த விவசாய பயனாளிகளின் எண்ணிக்கை… திட்டமிட்டு குறைக்கிறதா பாஜக அரசு?!
சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட `பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 67% சரிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திட்டம் அமலான கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் பங்கு குறைந்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியிருக்கிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி தேர்தல் நேர வாக்குறுதி: கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவந்த நிலையில், பிரதமர் மோடியால் பிப்ரவரி மாதம்…