`5,000 ஏக்கர்; 10,000 குடும்பங்கள்!’- கலங்கும் வேதாரண்யம் முல்லைப்பூ விவசாயிகள் #CoronaLockdown
கொரோனா பாதிப்பால் சுமார் 5,000 ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி செய்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்து வேதனைப்படுகிறார்கள். முல்லைப்பூ நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம், நெய்விளக்கு, ஆதனூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது. இங்கு விளையும் முல்லைப்பூக்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, அதை தஞ்சை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருக்கும் பூ வியாபாரிகளுக்கு அனுப்பி…