வெளிநாட்டினர் பாராட்டிய தமிழக விவசாயம்… `இயற்கை விவசாயக் கொள்கை’ இப்படித்தான் இருக்க வேண்டும்!
தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னோடியாகவும், முற்போக்கானதாகவும் இருந்து வரும் மாநிலம். ஒரு வித சமச் சீரான, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியைக் கொண்ட மாநிலம். இதற்கு முக்கிய காரணம் இந்த மண் பரப்பு கல்விக்குக் கொடுத்த முதன்மைத் தன்மை. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு”, போன்றவை தமிழ் சமூகம் கல்விக்கு கொடுத்த இடத்தைத் தெரிவிக்கும். கல்லணை `நீர் வளம் பெருக்கி, விவசாயம் காத்தவன்’ பொன்னியின் செல்வனுக்கு விவசாயி…