`நீதிமன்றக் காவலிலுள்ள செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி; எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?’- கிருஷ்ணசாமி
`தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சரை நீக்க ஆளுநருக்கு சட்டப்படி அதிகாரமில்லையெனில், ஊழல் புரிந்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ள ஒருவரை அமைச்சராக வைத்திருக்க எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?’ என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து, நீக்கி உத்தரவிட்ட தனது அறிவிப்பை, ஆளுநர் நேற்று (29-ம் தேதி) நள்ளிரவு வாபஸ் பெற்றுக்கொண்டிருக்கிறார். ஜூன் 13-ம் தேதி…