ராமநாதபுரம்: 114 அரங்குகள், 2 லட்சம் நூல்கள் – கோலாகலமாகத் தொடங்கியுள்ள புத்தகத் திருவிழா!
ராமநாதபுரத்தில் ‘முகவை சங்கமம்’ என்ற பெயரில் பிரமாண்ட புத்தகத் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் இந்த 5-வது புத்தகத் திருவிழாவானது பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 19-ம் தேதிவரை இந்தப் புத்தகத் திருவிழாவானது நடைபெற உள்ளது. விகடன் புத்தக அரங்கில் மாவட்ட ஆட்சியர் புத்தகத் திருவிழாவில் 114…