“கூட்டம் நடத்துவதால் மட்டும் குறைகள் தீர்ந்துவிடாது” -உண்மையை உடைக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு!
ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிற குறை தீர்க்கும் நாளில் பெறப்படுகின்ற மனுக்களின்மீது உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வு காண்பது மிகவும் முக்கியம். அத்தீர்வு பிரச்சினைக்கான முடிவாக இல்லாமல் விடிவாக இருக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது, “மாவட்ட அளவில் அரசாங்கமாக மக்கள் நினைக்கும் உன்னத நிலையில் ஆட்சித் தலைவராக உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து…