தொடர் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் இதுதான்!
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமப் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று தொடங்கிய தேசியப் பங்குச் சந்தையில் 15 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகச் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அதானியின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருவதுடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் அதானி கீழிறிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று தொடங்கிய தேசிய…