2022 இல் காஷ்மீரில் எத்தனை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை? ஏடிஜிபி கொடுத்த பகீர் தகவல்
2022ஆம் ஆண்டில் காஷ்மீரில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களை அம்மாநில ஏடிஜிபி விஜயகுமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 93 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 172 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பையும்,…