Flash News

கச்சத்தீவு அருகே தமிழக படகு மீது இலங்கை ரோந்துக் கப்பல் மோதல்

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில், நல்வாய்ப்பாக மீனவர்கள் உயிர் தப்பினர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை ரோந்துக் கப்பல், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த நபரின் விசைப்படகில் மோதியதில், படகு கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு மீனவர்களையும், மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றியதை அடுத்து,…

Read More
Tamilnadu

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அன்பழகன் உட்பட 5 பேர் மீது வழக்கு

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன், மனைவி உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச…

Read More
Tamilnadu

கோவை: 4ஆவது நாளாக வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை

கோவையில் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் நான்காவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை, கடந்த நான்கு நாட்களாக பி.கே.புதூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கியுள்ளது. குடோனின் இரு புறமும் கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று நாட்களாக உணவு தண்ணீரின்றி சிறுத்தை குடோனில் உள்ள நிலையில், அதற்கான உணவு கூண்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை சாப்பிட சிறுத்தை கூண்டிற்குள் நுழைந்தால், பிடித்து விடும் முயற்சியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.