திருப்பதியில் 10 நாள்கள் சொர்க்கவாசல் திறப்பு – இலவச வைகுண்ட தரிசனம் யாருக்குத் தெரியுமா?
திருமலை அன்னமய்ய பவனில் நடைபெற்ற அறங்காவலர் குழுக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத்தின் அறங்காவலர்குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, ‘‘திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும். திருப்பதி பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 10 நாள்களுக்கு சொர்க்கவாசலைத் திறந்துவைக்க முடிவு செய்துள்ளோம். சொர்க்கவாசல் வழியாகச் சென்று வர 10 நாள்களுக்கும்…