யூரோ டூர் – 18: ஹிட்லர் எனும் சிப்பாய் ஒரு சர்வாதிகாரி ஆனது எப்படி?
பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றவன், ஓர் இனத்தை அழித்தவன், அரக்கன், சர்வாதிகாரி, கொடுங்கோலன்… இப்படி எந்த அடைமொழியால் சொன்னாலும் சிறுகுழந்தைக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் அடால்ஃப் ஹிட்லராகத்தான் இருக்கும். ஹிட்லர் இறந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனாலும், ஹிட்லரின் கொடூரங்களை இன்னமும் ஐரோப்பாவின் வரலாற்றில் இருந்து துடைக்க முடியவில்லை. ஐரோப்பாவின் சரித்திரத்தை அடால்ஃப் ஹிட்லரின் கதையை தவிர்த்துவிட்டு எழுதிவிடவே முடியாது. ஹிட்லரின் வாழ்க்கையை எழுதுவதன் மூலம், மறைமுகமாக அந்த சர்வாதிகாரியை புகழ்வதாகவோ, பெருமைப்படுத்துவதாகவோ, உயர்த்துவதாகவோ…