சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி!
சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி படுதோல்வியடைந்தது. இதனையடுத்து 4 டெஸ்ட் போட்டிக்கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது…