விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன மனைவியை சந்தித்த கணவன்: நெகிழ்ச்சி சம்பவம்!
இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பம் அனைத்தையும் விரல்களின் நுனியில் கொண்டு வந்துவிட்டது. அந்த வகையில் அதே தொழில்நுட்பத்தின் துணையினால் தென்கொரியாவில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டில் வசித்து வரும் கிம் ஜாங்-சூ, விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன தன் மனைவியை சந்தித்துள்ளார். தொழில்நுட்பத்தின் துணையோடு உயிர்நீத்த தன் மனைவியின் கரங்களையும் அவர் பற்றியுள்ளார். அந்த நாட்டின் தொலைகாட்சி ஒன்றில் ஆவணப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக உயிர்நீத்த தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திக்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு…