டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
மகாராஷ்டிராவில் டிக்டாக் பிரபலம் பூஜா சவான் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவசேனா அமைச்சர் சஞ்சய் ரதோட், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான பூஜா சவான், டிக்டாக்கில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இவர் கடந்த எட்டாம் தேதி, பூனே நகரில் கட்டடத்தின் மீதிருந்து விழுந்து உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மகாராஷ்டிரா வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரதோட்டுக்கு தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டி, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மகளிர் அமைப்பினர் போராட்டங்களிலும்…