Cyclone Michaung: தீவிர வலுப்பெறும் `மிக்ஜாம்’ புயல்! – எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜாம் புயலானது வட தமிழகம் நோக்கி நகர்ந்துவரும் சூழலில், பலத்த காற்று, மிக கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு இன்றும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலட் விடப்பட்டிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாகி உருவாகி, காலை 08:30 மணியளவில்…