சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை… அவசர உதவி எண்களை அறிவித்த அரசு!
வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விட்டுவிட்டு பெய்த கனமழை, இன்று காலை முதல் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. சென்னை குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 4.5 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16-ல்…