ஊட்டியில் பூங்காக்கள் திறப்பு… சுற்றுலாவுக்கு அனுமதி… கவனிக்க வேண்டியவை என்ன?!
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டன. Ooty Market 5 மாத முடக்கத்திற்குப்பின் தற்போது ஒவ்வொரு துறைக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இ-பாஸ் நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டாலும் நீலகிரி போன்ற கோடை வாசஸ்தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. சுற்றுலா வருவாயைச் சார்ந்துள்ள மாவட்டம் நீலகிரி. கடந்த 5 மாதங்களாக லாக்டெளன் காரணமாக நீலகிரியில் எந்தவிதமான வியாபாரமோ, பணப்புழக்கமோ இல்லை….