தோல்விக்குப் பிறகு கண் கலங்கிய ரோகித் சர்மா – ஆறுதல் கூறிய ட்ராவிட்; வைரலாகும் வீடியோ!
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தநிலையில், அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண் கலங்கியபோது, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆறுதல் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. 8-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது….