“ஒரு வேண்டுகோளை மட்டும் கேட்டுக்கிட்டேன்!” – 16 மாணவர்களுக்கு ரீசார்ஜ் செய்த சலூன் கடைக்காரர்
பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளியின் கணித ஆசிரியை பைரவி, தன் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தனது சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்த செய்தியை விகடனில் பதிவு செய்திருந்தோம். குடும்பத்தின் பொருளாதார நிலையால் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காமல் தவித்த மாணவர்களுக்கு இந்தப் பரிசுடன், ஊரடங்கு முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும்வரை ரீசார்ஜ் செலவை அவர் ஏற்றுக்கொண்டிருந்ததையும் நமது செய்தியில் எழுதியிருந்தோம். மாணவர்களுடன் ஆசிரியர் பைரவி விகடன் இணையதளத்தில் இந்தச் செய்தியைப்…