மயிலாடுதுறை: இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டடம் – அச்சத்தில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!
மயிலாடுதுறை அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகேயுள்ள தலைஞாயிறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியிலுள்ள வகுப்பறைகளில் மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில், மேற்கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து வகுப்பறையில் விழுந்துள்ளன. இதனால் பள்ளிக்கு மாணவர்களை…