கப்பலூர் டோல்கேட்டை அகற்றக் கூறி போராட்டம்… ஆர்.பி.உதயகுமாரைக் கைதுசெய்த போலீஸ்!
மதுரை அருகே கப்பலூர் டோல்கேட்டை அகற்றச்சொல்லி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதான சம்பவம் திருமங்கலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டம், கப்பலூரில் அமைந்துள்ள டோல்கேட் தென்மாவட்ட மக்களுக்கு முக்கியமானது. திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு அருகில் விதிகளை மீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் பல வருடங்களாகப் போராடி வருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று முதலில்…