Protest

“முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு தாரை வார்த்துவிட்டது!” – கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், “வரும் 29-ம் தேதி காலை 7 மணிக்கு அணையிலிருந்து நீர் திறக்கப்படும்” என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான போது நீர்மட்டம் 137 அடி மட்டுமே இருந்தது. அணையில் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு தரப்பில் எவ்வித உத்தரவும் வழங்கப்படவில்லை. தேனி மாவட்ட ஆட்சியருக்கு கூட இந்தத் தகவல்…

Read More
Protest

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கலவரம்… பின்னணியில் இஸ்லாமிய அமைப்பு?

வங்க தேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு கடந்த அக்டோபர் 13 முதல் நிம்மதி இல்லை. துர்கா பூஜையின்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் நாடு முழுக்க பெரும் கலவரத்துக்கு வித்திட்டன. குறிப்பாகத் தெற்கு வங்க தேசத்தில் இந்துக்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளில் கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகள் தீவைக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கோயில்களும் துர்கா பூஜை பந்தல்களும் தாக்கப்பட்டன. இந்த வன்முறையில் இதுவரை ஏழு பேர் இறந்திருக்கிறார்கள். பல…

Read More
Protest

“தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவோம்”- சீர்காழியில் மீனவர்கள் ஆவேசப் போராட்டம்!

சீர்காழி அருகே சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரி மூன்றாவது நாளாக 21 மீனவக் கிராமங்களில்  போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகளின்  பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி மீனவ மக்கள் தங்களின் ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகளைச் சாலையில் கொட்டியதால் பதற்றம் நிலவுகிறது. எனவே அந்தப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள  கடலோர மீனவக்  கிராமங்களில் சுருக்குமடி வலைகளைப்  பயன்படுத்த அனுமதி கோரி 21 கிராம மீனவர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.