“குவாரிகளால இனி தொல்லை இருக்காதுனு நம்புறோம்!”- 8 நாள்களுக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்ட மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில், 160-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகே, எட்டு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில், `குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, இரவு நேரங்களில் வெடிவைப்பதுடன், கிராமத்தின் வழியாக தினமும், 1,200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது’ என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாகப் புகார் தெரிவித்து வருகின்றனர். ‘டென்ட்’ அமைத்து போராடிய கிராம மக்கள். இந்த நிலையில், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி,…