`தைரியமிருந்தால், கர்நாடக அரசைக் கண்டிக்கிறோம்னு தீர்மானம் போடுங்க’ – சி.வி.சண்முகம் சாடல்!
காவிரி நதிநீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் குறித்தும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்தும் நேற்று இரவு (09.10.2023) திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது பேசிய அவர், “காவிரி நதிநீர் திறப்பு தொடர்பாக திமுக அரசு இன்று சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தில், “காவிரிவ் நீர் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரைத் திறக்க வேண்டும்” என்ற…