“பாஜக மாநில தலைவர் அதிகாரமாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” – சொல்கிறார் புகழேந்தி
உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்றபின் வீட்டில் ஓய்வில் இருக்கும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க (ஓ.பி.எஸ் அணி) கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவான ஆணை பிறப்பித்திருக்கிறது. அதில் எங்களுக்கு மாற்று கருத்தே இல்லை. உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை தெரிந்துகொண்டு,…