“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நாளை வீடு திரும்புகிறார்” – விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நாளை வீடு திரும்பவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருச்சி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ள 4 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறிய அவர்,…