“கொரோனா விஷயத்தில் அமெரிக்கா, இத்தாலியைவிட இந்தியா பெஸ்ட்!” – சி.பி.ஆர் சான்றிதழ்
கொரோனா கொடூரத்துக்கு இணையாக, மக்களின் அன்றாடத் தேவைகளும் நெருக்கடிகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன! இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவினால் வேலையின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் 130 கோடி மக்களுக்கான உணவுத் தேவை, பொருளாதாரச் சிக்கல்கள், வருகிற நாள்களில் கொரோனா பாதிப்பைவிடவும் பெரிய பிரச்னையாக வெடித்துக்கிளம்பும் என்று எச்சரிக்கிறார்கள் துறைசார்ந்த வல்லுநர்கள். இந்த நிலையில், மத்திய – மாநில அரசுகளின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசும் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், “கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் `நாடாளுமன்றத்தை மூடுங்கள்… மூடுங்கள்’ என்று…