செந்தில் பாலாஜி வழக்கு: `900 பேரைச் சேர்த்திருக்கிறோம்!’ – சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை பதில்
அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011-2015 ஆண்டு காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவருடைய நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர்மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 2017-ம் ஆண்டு வழக்கு பதிவுசெய்தனர். சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு…