“என் குடும்பத்தினரை வாசலில் நின்று பார்த்துவிட்டு வந்தேன்” – பஞ்சாப் மருத்துவரின் சோகம்
பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹரில் உள்ள அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றி வருபவர் மருத்துவர் குர்பல் கடாரியா. இவரும் இவரது குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 பேருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர் கட்டாரியாவின் மனைவி ஹோஷியார்பூர், சிவில் மருத்துவமனையில் பல் மருத்துவராக உள்ளார். கட்டாரியா கடைசியாக அவரது குடும்பத்தை 2 வாரங்களுக்கு முன்பு பார்த்து வந்துள்ளார். அப்போதும் வீட்டின் வாசலிலேயே நின்று பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டதாகக் கூறுகிறார். அவர் பேசுகையில், “நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிற்குள்…