`இப்போதும் தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டுதான் வீடு திரும்புகிறார்’ -கர்னலின் மனைவி உருக்கம் #Handwara
காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், ஹந்த்வாரா பகுதியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அந்த வீட்டில் இருந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். இந்தத் தகவல் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கவே, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் காஷ்மீர் போலீஸ் ஆகிய பாதுக்காப்புக் குழுவினர், கூட்டு முயற்சியில் இறங்கினர். Handwara உடனடியாக, குறிப்பிட்ட அந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டதுடன் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த மற்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பிணைக் கைதிகளாக இருக்கும் மக்களை மீட்க ராணுவம் மற்றும்…