கட்டடம் எழுப்ப நேரம் உள்ளது; மாநில முதல்வர் பேச்சை கேட்க இல்லை: பிரதமருக்கு மம்தா கண்டனம்
கொரோனா தீவிரமாக இருக்கும் முக்கியமான 11 மாநிலங்களை சேர்ந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில், மோடி மட்டுமே பேசியதாகவும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு பேச உரிமை மறுக்கப்பட்டதாகவும் கூறி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மோடியுடனான பேச்சுவார்த்தை, ஒரு வழியாக இருந்திருக்கிறது எனக்கூறியுள்ள அவர், இது முதல்வராக தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என கூறியிருக்கிறார் மம்தா. இந்தக் கூட்டம் மட்டுமன்றி, மாநில முதல்வர்கள் கலந்துக்கொள்ளும் கூட்டத்திலும் இப்படித்தான்…