கொரோனாவால் இறக்கும் சடலங்களை கண்ணியத்துடன் கையாள வேண்டும்: மனித உரிமைகள் ஆணையம்
‘கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுங்கள்’ என மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்கள் கங்கை யமுனை உள்ளிட்ட ஆறுகளில் வீசப்படுவது சம்பந்தமான செய்திகளும் வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் எரிப்பதற்கு போதிய இடங்கள் இல்லாமல் உடல்கள் ஒன்றாக குவிக்கப்பட்டு இருப்பதும் சாலைகள் பூங்காக்களில்…